பெரம்பலூர்: மது குடிக்க மனைவி பணம் தராததால் தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ரசலாபுரம் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 55), விவசாயி. இவரது மனைவி இருவாய். கடந்த 2 நாட்களுக்கு முன்பு முத்துசாமி ஒரு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு மது போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். 

பின்னர் அவர் மீண்டும் மது குடிப்பதற்காக தனது மனைவியிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். மது குடிக்க இருவாய் பணம் தராததால் மனவேதனை அடைந்த முத்துசாமி நேற்று (மார்ச்.16) காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், முத்துசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தொடர்புடைய செய்தி