பெரம்பலூர் குன்னத்தில் நேற்று (மே 26) திமுக, விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக இன்று (மே 27) காவல்துறையினர் திமுக, விசிகவினர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். மோதல் சம்பவத்தில் ஈடுபட்ட எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த மோதல் தொடர்பாக 120 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.