ஆலங்குடி: பைக்கில் சென்றவர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த வெள்ளாள கொள்ளையை சேர்ந்தவர் குணசேகரன் (42). இவர் ஆலங்குடியிலிருந்து தனது வீட்டிற்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது பத்தாம்பட்டி கல்லுகடை பேருந்து நிறுத்தம் அருகே, அவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோதியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி அளித்த புகாரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி