அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அந்நாட்டு அரசு குண்டுக்கட்டாக நாடு கடத்தியது. இந்நிலையில், சட்ட விரோத குடியேற்றத்தை தடுக்க 41 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா பயணிக்க அதிபர் டிரம்ப் விரைவில் தடை விதிக்க திட்டமிட்டுள்ளார். இதனால் ஆப்கானிஸ்தான், ஈரான், சிரியா, கியூபா, வடகொரியா, சோமாலியா, வெனிசுலா, ஏமன் உள்ளிட்ட 41 நாட்டை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.