"எதிர்காலத்தில் காகித பணம் காலாவதியாகிவிடும்" என டெஸ்லாவின் CEO எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “வரும் காலங்களில் காகித பணம் இருக்காது. கிரிப்டோகரன்சி போன்ற டிஜிட்டல் கரன்சிகள் மாற்றாக இருக்கும்” என உறுதியாக தெரிவித்துள்ளார். மேலும், பணம் என்பது பொருளாதார சக்தியின் சுருக்கம் மட்டுமே என்றும் சக்தி மற்றும் வளங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.