திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் உள்ள கம்பி வட ஊர்தியில் Non Destructive Testing (NDT) சோதனை நடைபெற உள்ளதால், வரும் இன்றும், நாளையும் (நவ., 13, 14) ஆகிய இரண்டு தினங்களில் ரோப் கார் தற்காலிகமாக இயங்காது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்கள் யானை பாதை, படிப்பாதை மற்றும் மின் இழுவை ரயில் வழியாக மலைக்கோயிலுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.