பாகிஸ்தானைச் சேர்ந்த அழகுசாதனக் கிரீம்கள் இந்தியாவின் சம்பாஜி நகருக்குள் ஊடுருவியுள்ளன. இந்தக் கிரீம்கள் பலருக்கும் உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்திய இருவருக்கு சிறுநீரகங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் பொருட்கள் இந்தியாவிற்குள் எப்படி வந்தது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இது வேண்டுமென்றே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டதா? என விசாரித்து வருகின்றனர்.