இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையத்தின் புதிய முயற்சியாக கூகை திரைப்பட இயக்கம் மற்றும் நூலகத்தை நடத்தி வருகிறார். இங்கு திரைப்பட இயக்கம் கற்று வந்த வீரா என்பவர் இன்று (மே 29) உடல்நலக்குறைவால் காலமானார். சொந்த ஊரான கடலூர் விருத்தாச்சலத்தில் நாளை இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பிரபல இயக்குநர் லெனின் பாரதி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.