15 லட்சத்திற்கு மேற்பட்டோர் பேர் ரசிப்பு - விமானப்படை பெருமிதம்

வானில் 72 விமானங்களின் வண்ணமய சாகச நிகழ்வை, சென்னை மெரினா மட்டுமின்றி, தெற்கில் கோவளம் முதல் வடக்கில் எண்ணூர் வரை கடற்கரைகளிலும், மொட்டை மாடிகளிலும் என 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ரசித்ததால் லிம்கா சாதனை புத்தகத்தில் நிகழ்வு இடம்பிடித்துள்ளது. டெல்லி, பிரயாக்ராஜ், சண்டிகரில் இந்த சாகசங்கள் நடைபெற்றுள்ள போதிலும் விமானங்கள் எண்ணிக்கையிலும், பார்வையாளர் எண்ணிக்கையிலும் சென்னையே பிரமாண்டமாக அமைந்தது என இந்திய விமானப்படை பெருமிதம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி