தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்.. வெளுத்து வாங்கும் மழை!

இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், தமிழ்நாட்டில் நாளை மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் “ஆரஞ்ச் அலர்ட்” எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், நாளை தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழையும், குமரி, தென்காசி, நெல்லை, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சியில் கனமழையும் பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.