தமிழ்நாட்டில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த நிலையில் இன்று (ஆக.11) 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை, நீலகிரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர் ஆகிய 5 மாவட்டங்களில் மிக கன மழைக்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி தருமபுரி, சேலம், திருப்பத்தூர், கரூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.