தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நாளை (ஏப்.23) நடைபெறவுள்ள நிலையில், வெளியூர்களில் உள்ள பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். இந்த நேரத்தை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை ரூ.3000 வரை உயர்த்தியுள்ளது. சென்னை - மதுரை ரூ.3000 வரையும், திருநெல்வேலி - தூத்துக்குடிக்கு ரூ.3,500 வரையும் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ‘கூடுதல் கட்டணம் வசூலித்தால் பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும்’ என தமிழக அரசு எச்சரிக்கைவிடுத்துள்ளது.