காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அரசு அதிகாரிகளுடன் இன்று (ஜன.19) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் ஏற்படாததால், இப்போராட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 45 ஆண்டுகளாக தங்களது கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படவில்லை என்று ஊழியர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
நன்றி:NewsTamil24/7