தமிழ் சினிமாவில், நாளை (நவ.14) ஐந்து புதிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன. அதன்படி துல்கர் சல்மானின் 'காந்தா', ஆனந்தராஜின் 'மதராஸ் மாஃபியா கம்பெனி', சேரனின் 'ஆட்டோகிராப்' (ரீ ரிலீஸ்), குழந்தைகளை மையப்படுத்திய 'கிணறு', மற்றும் லிங்கா நடிக்கும் 'தாவுத்' ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகவுள்ளன. 'ஆட்டோகிராப்' 21 ஆண்டுகளுக்குப் பிறகு டிஜிட்டல் முறையில் 120க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.'கும்கி 2' திரைப்படம் நீதிமன்றத் தடையால் வெளியாகவில்லை.