நடிகை நித்யா மேனன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான கேயுரி புரொடக்ஷனை தொடங்கியுள்ளார். திரைப்படங்களை உருவாக்குவது என்பது வெறும் கதைகளைச் சொல்வதை விட மேலானது என்றும், இது மக்களை ஆழமான மட்டத்தில் சென்றடைவது பற்றியது என்றும் அவர் தெரிவித்துள்ளார். படைப்புச் செயல்பாட்டில் மூழ்கியிருக்கும் போது தனக்குள்ளும், மற்றவர்களிடமும் அமைதியான மாற்றங்களை உருவாக்குவதே தனது நோக்கம் என்றும், நடிப்பு முதல் தயாரிப்பு வரை இதுவே தனது நோக்கமாக இருக்கும் என்றும் நித்யா மேனன் கூறியுள்ளார்.