75 போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது!!

கவுண்டம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் ஆகியோர் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, போலீசாரைக் கண்டதும் ஒருவர் தப்பி ஓட முயன்றார்.

உடனடியாக அவரை மடக்கிப் பிடித்த போலீசார், சோதனை செய்தபோது அவரிடமிருந்து 75 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்டவர் கவுண்டம்பாளையம் டி. வி. எஸ். நகர், சக்தி கார்டனைச் சேர்ந்த வீரமணிகண்டன் (வயது 27) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து போதை மாத்திரைகளுடன் சேர்த்து செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மேலும் 4 பேர் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. இதில் பாலன் என்ற சொரி பாலன், பூபதி, முகுந்த் மற்றும் கோவிந்த் ராவ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி