தொடர்ந்து உரமிடுதல் மற்றும் மருந்து தெளித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். ஏப்ரல் மாதம் முதல் வாரத்திற்கு மேல் மலர்கள் பூத்துவிடும். ஆனால், இம்முறை பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் எதிர்பார்த்த அளவிற்கு மழை பெய்யாத நிலையில், செடிகள் வளர்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், இதுவரை மலர்கள் பூக்காமல் உள்ளன. ஓரிரு பாத்திகளில் மட்டுமே மலர்கள் காணப்படுகின்றன. முதல் மற்றும் இரண்டாம் பாத்திகளில் மலர்கள் பூக்கவில்லை. இதனால், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். இம்முறை மே மாதமே ரோஜா பூங்காவில் மலர்கள் பூக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோஜா கண்காட்சிக்காக பூங்காவை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இடதுசாரி கூட்டணி தோல்வி.. மீசையை வழித்த தொண்டர்