எதிர்வரும் ஆறாம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இரண்டு நாள் பயணமாக உதகைக்கு வருவதை முன்னிட்டு கட்சித் தொண்டர்கள் சாலை ஓரங்களில் கட்சிக் கொடிகளை நாட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சாலை ஓரங்களில் வர்ணம் பூசியும், சாலை முழுவதும் கொடிக் கம்பங்களால் அலங்கரிக்கும் பணியில் கட்சித் தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர்மேலும் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்கு கட்சித் தொண்டர்கள் மற்றும் கட்சி முக்கிய பிரமுகர்கள் ஆலோசித்து வருகின்றனர்.