நீலகிரி: 20 நாட்களாக குடிநீருக்காக காத்திருக்கும் மக்கள்

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்குட்பட்ட ஏழாவது வார்டு விவேகானந்தா நகர் பகுதியில் கடந்த 20 நாட்களாக குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருவதாகவும், பார்சல் வேலி பகுதியில் குடிநீர் விநியோகம் மோட்டார் திடீரென பழுதடைந்ததால் உதகையில் உள்ள பல பகுதிகளில் பொதுமக்களுக்கு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது எனவும் சுமார் 20 நாட்களாக ஏழாவது வார்டு விவேகானந்தர் பகுதியில் இந்த பிரச்சனை நீடித்து வருவதால் அப்பகுதி குடிமக்கள் குடிநீர் தேவைக்காக தண்ணீர் லாரிக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என வேதனை தெரிவிக்கின்றனர். 

பலமுறை புகார் தெரிவித்தும் நகராட்சி துறையின் செயல்பாடு உறக்கத்திலேயே உள்ளது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தண்ணீர் லாரிகளில் குடிநீர் தருவதை மட்டுமே கவனத்தில் கொள்ளும் நகராட்சி நிர்வாகம் நிரந்தர தீர்வாக மோட்டார் வாங்கும் விஷயத்தில் கவனம் செலுத்துவது இல்லை எனவும் பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். மேலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் தங்களது பிரச்சனைகளை கவனத்தில் கொண்டு விரைந்து நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தராவிட்டால் அனைவரும் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தப் போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி