விழா குழு அறங்காவலர் கீதா ஸ்ரீனிவாசன் இந்த விருதை வழங்கி கௌரவித்தார். விழாவின் முதல் நாளான நேற்று, பல அறிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் மொழி ஆர்வலர்கள் கலந்து கொண்டு மொழி பாதுகாப்பு மற்றும் இலக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினர்.
வரும் இரண்டு நாட்களில், மொழியியல் உரையாடல்கள், விவாதங்கள் மற்றும் அனுபவப் பகிர்வுகள் நடைபெறவுள்ளன. 40க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் உரையாற்றவுள்ளனர். இன்று, இந்திய சினிமாவின் பரிணாம வளர்ச்சி குறித்த விவாதத்தில் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் மணிரத்னம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்.