நீலகிரி: ரூ.85 லட்சம் மோசடி செய்தவர் கைது

உதகையைச் சேர்ந்த அப்பாஸ் (39) என்பவர், பழைய கார்களை வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டு, பொதுமக்கள் பலரிடம் வாங்கிய வாகனங்களுக்கு முழு பணம் தராமல், முன்பணம் மட்டும் கொடுத்துவிட்டு, வாகனங்களை வேறு இடத்தில் விற்று மோசடி செய்துள்ளார். சுமார் 31 பேரிடம் ரூ.85 லட்சம் வரை மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. புகாரின் பேரில், தனிப்படை போலீஸார் கோவை உக்கடத்தில் பதுங்கியிருந்த அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி