நீலகிரி: குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த சிறுத்தை

நீலகிரி மாவட்டம் 65 சதவீத வனப்பகுதியை கொண்ட மாவட்டம் ஆகும். இங்கு மான், கரடி, சிறுத்தை, புலி, யானை, காட்டு மாடு போன்ற வனவிலங்குகளின் புகலிடமாக திகழ்ந்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி அவ்வப்போது குடியிருப்பு பகுதிக்குள் உலா வருவது வாடிக்கையாகி உள்ளது. 

இந்த நிலையில் உதகை அடுத்த லோட்டில் பகுதியில் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை உலா வந்த காட்சி கண்டு பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்து வருகின்றனர். உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்து குண்டு வைத்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கையை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி