இந்த தவக்காலத்தின், 4-வது ஞாயிற்றுக்கிழமையான இன்று உதகை கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சார்பில் இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளின் நினைவாக, சிலுவையை சுமந்தும், பக்தி பாடல்கள் மற்றும் ஜெபங்களுடன் தவக்கால பரிகார பவனி நடைபெற்றது. உதகை இருதய ஆண்டவர் தேவாலயத்தில் துவங்கிய இந்த பவனி, மருத்துவமனை சாலை, கூட்ஷெட், மேரீஸ்ஹில், ரோகிணி, காந்தல் வழியாக 7 கிலோமீட்டர் தூரம் சிலுவையை சுமந்து குருசடி திருத்தலத்தை அடைந்தது. அங்கு மறைமாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில், சிறப்பு திருப்பலி நடந்தது. குறிப்பாக உலகில் அமைதி நிலவ, கொடிய நோய்கள் உலகை விட்டு அகலவும், பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்காகவும் சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.
2026 வேட்பாளர்கள்.. தவெக முக்கிய அறிவிப்பு