உதகையில் சித்திரைத் தேர் திருவிழா இன்று துவக்கம்

உதகை மையப் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் திருக்கோவிலில் சித்திரை தேர் திருவிழா இன்று துவங்கியது. ஒரே பீடத்தில் காளியம்மன் மாரியம்மன் திருக்கோவில் இங்கு இன்று மதியம் ஒன்று முப்பது மணிக்கு திருத்தேர் பவனி நடைபெறும் என்பதை ஒட்டி காலை முதலே அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. 

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் அம்மனுக்கு மாவிளக்கு பூஜை மற்றும் விளக்கு பூஜை நடத்தி அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து பல வகையான அபிஷேகங்கள் செய்து வழிபாடு செய்து கொண்டு வருகின்றனர். மேலும் ஒன்று முப்பது முப்பது மணி அளவில் அம்மனின் திருத்தேர் பவனி வடம் பிடித்து துவங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி