இச்சம்பவம் குறித்து உறவினர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த காளீஸ்வரியை மீட்டு மதுக்கரை மார்க்கெட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கொள்ளையர்கள் வீட்டில் இருந்த ரூ. 20,000-ஐ திருடிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். க.கசாவடி போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்