கோவை: ஈஷாவில் தைப்பூசத் திருவிழா!

கோவை ஈஷா யோகா மையத்தில் தைப்பூச தின விழாவில் கிராம மக்கள், பழங்குடியினர் மற்றும் வெளிநாட்டினர் உட்பட ஏராளமான பக்தர்கள், முளைப்பாரியால் செய்யப்பட்ட லிங்க பைரவி தேவியின் திருவுருவத்தை பல்லக்கில் ஏற்றி, கள்ளிப்பாளையத்தில் இருந்து ஈஷா யோகா மையம் வரை நேற்று பாதயாத்திரையாக வந்தனர். 

அதைத் தொடர்ந்து, லிங்க பைரவி தேவிக்கு பக்தர்கள் நடத்தும் பைரவி சாதனா ஆன்மீகச் செயல்முறையின் நிறைவு விழா மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும், 2010 ஆம் ஆண்டு தைப்பூச நாளில் சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்க பைரவியின் பிரதிஷ்டை தின விழாவும் கொண்டாடப்பட்டது.

தொடர்புடைய செய்தி