அங்கிருந்தவர்கள் நடராஜன் சாப்பாட்டு பை மற்றும் உடைகள் அங்கு இருப்பதாகவும் ஆனால் அவர் பணியில் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நடராஜன் குடும்பத்தார் அவரை பல இடங்களில் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நடராஜ் இடையார்பாளையம் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் பிணமாக கிடந்துள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்த கவுண்டம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து இன்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.