கோவை: மழை நீரில் சிக்கிய அரசு பேருந்து; வீடியோ

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இரண்டாவது நாளாக நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருவதால், பல பகுதிகளில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்றைய முன் தினம் சாய்பாபா காலனி பகுதியில் தனியார் பேருந்து மழை நீரில் சிக்கிய நிலையில், நேற்று சிவானந்தா காலனி ரயில்வே தரைப்பாளத்தில் அரசு பேருந்து மழை நீரில் சிக்கியது.

இது போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்தது. வெகு நேரம் கழித்து கிரேன் உதவியுடன் பேருந்து மீட்கப்பட்டது. மழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவை மாநகராட்சியில் மழை நீர் தேங்காமல் இருக்க முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருவதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மழை நீர் வடிகால்களை சுத்தம் செய்யும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தொடர்புடைய செய்தி