நீலகிரி: காட்டு யானையின் வைரல் வீடியோ

நீலகிரி மாவட்ட வனப்பகுதிகள் முக்கியமான உயிர்சூழல் மண்டலமாக கருதப்படுகின்றன. இந்த வனப்பகுதிகளில் பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அதிலும் யானை, புலி, சிறுத்தை, கரடி போன்ற பல்வேறு உயிரினங்களும் வசித்து வருகின்றன. மனிதர்கள் மட்டுமே அறிவுசார்ந்த பல்வேறு செயல்களை செய்கிறார்கள் என்னும் நிலையில் இந்த காட்டு யானை எங்கு சென்று B.Tech. படித்தது என்று தெரியவில்லை. 

மின்சாரவேலி அமைக்கப்பட்டுள்ள விவசாய நிலத்தில் அதற்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் போஸ்ட்டை கீழே தள்ளி விவசாய நிலத்திற்குள் செல்ல முயற்சிக்கிறது. தொடர்மழையின் காரணமாக வனப்பகுதி மற்றும் வனங்களை ஒட்டியுள்ள பகுதிகளிலும் பசுமை திரும்பியுள்ளதால் வனஉயிரினங்கள் விவசாய நிலங்களுக்குள் வருவது அதிகரித்துள்ளது. 

அந்தவகையில் கூடலூர் மெல்லியாலம் பகுதியில் காட்டுயானை விவசாய நிலத்திற்குள் வேலியை உடைத்து உள்ளே செல்லும் காட்சிகள் தற்போழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி