நீலகிரி: கன்று குட்டியை வேட்டையாடிய புலி

நீலகிரி மாவட்டம் மாயார் கிராமத்தில் கன்றுகுட்டியை புலி வேட்டையாடி வனப்பகுதிக்குள் இழுத்துச் செல்லும் பரபரப்பான காட்சிகள் வெளியாகியுள்ளன. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்தநிலையில் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வெளிமண்டல வனப்பகுதியில் அமைந்துள்ள மாயார் கிராமத்தில் வனப்பகுதியை ஒட்டியமைந்துள்ள பகுதியில் கன்றுகுட்டி மேய்ச்சலில் ஈடுபட்டிருந்தபோது வனப்பகுதியிலிருந்து வெளியேறிய புலி வேட்டையாடி கொன்றது. இந்தநிலையில் கிராமபகுதியில் பகல்நேரத்தில் உலாவரும் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என கிராமமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி