ஊட்டி: சுற்றுலா பயணிகளை கவரும் வண்ண மலர்கள்

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நாடுகளில் காணப்படும் மரங்கள் மற்றும் மலர்செடிகள் அதிகளவு காணப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு மரங்கள் மற்றும் தாவரங்களை கொண்டுவந்து பயிரிட்டனர். ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் நிலவும் காலநிலை இங்கும் நிலவுவதால், அந்த நாடுகளில் காணப்படும் பல்வேறு வகையான மரங்கள், தாவரங்கள் மற்றும் மலர்கள் அதிகளவு இங்கு கொண்டுவரப்பட்டு நடவு செய்யப்பட்டது. 

அதே சமயம் நீலகிரி மாவட்டத்திற்கு உரிய சில தாவரங்கள் மற்றும் மரங்கள் உள்ளன. சதுப்பு நிலங்கள் மற்றும் மலைகளில் காணப்படும் இந்த மரங்களில் அவ்வப்போது சில மலர்கள் பூத்து காணப்படும். குறிப்பாக, தொட்டபெட்டா மற்றும் அவலாஞ்சி போன்ற மலைப்பகுதிகளில் ரோடோடென்ட்ரான் மரங்கள் அதிக அளவு காணப்படுகின்றன. இந்த மரங்களில் பனிக்காலமான டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை அடர் சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் பூக்கள் பூத்து காணப்படும். இதனை அருகில் பார்ப்பதற்கு ரோஜா மலர்களைப் போன்று காட்சி அளிக்கும். இதனை இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பது மட்டுமல்லாமல் அதனை புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

தொடர்புடைய செய்தி