அதே சமயம் நீலகிரி மாவட்டத்திற்கு உரிய சில தாவரங்கள் மற்றும் மரங்கள் உள்ளன. சதுப்பு நிலங்கள் மற்றும் மலைகளில் காணப்படும் இந்த மரங்களில் அவ்வப்போது சில மலர்கள் பூத்து காணப்படும். குறிப்பாக, தொட்டபெட்டா மற்றும் அவலாஞ்சி போன்ற மலைப்பகுதிகளில் ரோடோடென்ட்ரான் மரங்கள் அதிக அளவு காணப்படுகின்றன. இந்த மரங்களில் பனிக்காலமான டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை அடர் சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் பூக்கள் பூத்து காணப்படும். இதனை அருகில் பார்ப்பதற்கு ரோஜா மலர்களைப் போன்று காட்சி அளிக்கும். இதனை இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பது மட்டுமல்லாமல் அதனை புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.
யுனெஸ்கோ மாநாடு.. 1400 பிரதிநிதிகள் பங்கேற்பு