மேலும் பாரம்பரியமாக பின்பற்றி வரும் கோலாட்டம் ஆண்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடனமாடி சிறப்பித்தனர். மேலும் வண்ண ஒளி விளக்குகள் மிளிர ஆடல் பாடல் என திருவிழா கலைகளை கட்டியது. இந்த திருவிழாவில் குழந்தைகளுக்கு நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு சிறப்பாக நடனமாடிய குழந்தைகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
இரண்டு நாட்கள் கொண்டாடிய திருவிழாவில் பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். ஆண்கள் பெண்கள் என்று எந்த வேறுபாடும் இன்றி அனைவரும் ஒன்றிணைந்து நடனமாடி மகிழ்ந்த காட்சிகள் திருவிழா காலங்களில் மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.