நீலகிரி: பத்திரிக்கையாளர்களை செய்தி சேகரிக்க அனுமதி மறுப்பு

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட முதல் நகராட்சி கூட்டத்தில் பத்திரிக்கையாளர்களை செய்தி சேகரிக்க அனுமதிக்காமல் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டக் கோத்தகிரியில் சிறப்பு நிலை பேரூராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. அண்மையில் தமிழக அரசு பல்வேறு பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தியது. அதில் கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி நகராட்சியாக அறிவிக்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து நகராட்சி முதல் ஆணையராக மோகன்குமார் என்பவர் நியமிக்கப்பட்டு இன்று நகராட்சியின் முதல் கூட்டம் 21 நகர்மன்ற உறுப்பினர்களுடன் தொடங்கியது. பல்வேறு முறைகேடுகள் குறித்து நகர்மன்ற உறுப்பினர்களிடையே பெரும் வாக்குவாதங்கள் நடைபெற்றன. அப்போது செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்களை அனுமதிக்காமல் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து முறைகேடு குறித்து கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி