கூடலூர்: மது போதையில் மாமியார் கொலை - தொழிலாளி கைது

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவாலா அருகே, மதுபோதையில் வீட்டிற்கு வந்த மருமகன் அசோக், மனைவியின் சகோதரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரைத் தடுக்க வந்த மாமியார் ஆரோக்கிய மேரியை அரிவாளால் வெட்டிக் கொன்றார். மேலும் அஜித் என்பவரும் படுகாயமடைந்தார். தேவாலா போலீசார் அசோக்கை கைது செய்து, ஆயுதத்தைப் பறிமுதல் செய்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி