இதுகுறித்து அவர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்ததில், சிறுத்தையின் தாக்குதலால் ஆடுகள் இறந்தது உறுதி செய்யப்பட்டது. வனத்துறையினர், இறந்த ஆடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, சிறுத்தை மனிதர்களையும் தாக்கும் அபாயம் உள்ளதால், வனத்துறை கூண்டு வைத்து சிறுத்தையை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இறந்த ஆடுகளுக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.