மேலும் சாலைகள் இடிந்து சேதம் அடைந்ததால் அவசர தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை தற்போது வரை நீடித்து வருகிறது. இதனிடையே மீண்டும் அரசு மருத்துவமனை விரிவாக்கம் செய்ய ஜேசிபி வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு ராட்சத பாறைகள் அப்புறப்படுத்தும் போது உண்டாகும் அதிர்வுகளால் குடியிருக்கும் வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டு சேதமடைந்து வருகின்றன. இதனால் மருத்துவமனை விரிவாக்கம் செய்யப்படும் பகுதியைச் சுற்றிலும் தடுப்பு சுவர் அமைத்த பின்னரே கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது!