ஊட்டி: மாருதி அலங்காரத்தில் அருள்பாலித்தார் ஆஞ்சநேயர்

ஊட்டி ஆஞ்சநேயர் கோவிலில், ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி மஹோற்சவ திருவிழா கோலாகலம் ராஜ மாருதி அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் பரவசம். ஊட்டி ஆஞ்சநேயர் கோவிலில், ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி மஹோற்சவ திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அக்ரகாரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவிலில் ஸ்ரீ அனுமத் ஜெயந்தி மஹோற்சவ திருவிழாவை ஒட்டி, அமாவாசை திதியும், மூலம் நட்சத்திரத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. 

இந்த நிகழ்ச்சியை ஒட்டி, 9 நாட்கள் உற்சவம் ஆரம்பம் நடைபெற்றது. மஹா சுதர்சன ஹோமம், வாழைப்பழ அலங்காரம், வெற்றிலை சாத்து அலங்காரம், விசேஷ அலங்காரம், கனி அலங்காரம், சந்தனகாப்பு அலங்காரம், வெண்ணை காப்பு அலங்காரம், உலர் பழங்கள் அலங்காரங்கள் மிக சிறப்பாக நடைபெற்றது. நேற்று காலை, 9:00 மணியளவில் விசேஷ ஹோமம், பூஜை நடந்தது. 11:00 மணிக்கு அலங்கார திருமஞ்சனம், விசேஷ அலங்கார பூஜை நடந்தது. 

திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இன்று அதிகாலை 6:30 மணிக்கு ஹனுமத் ஜெயந்தி, ராஜ மாருதி அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து இன்று பிற்பகல் 3:00 மணிக்கு திருவீதி புறப்பாடு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

தொடர்புடைய செய்தி