இது குறித்து பேசிய பொதுமக்கள், இப்பகுதியில் சிறுத்தை அடிக்கடி வந்து நாய்களை வேட்டையாடுகிறது. இம்முறை காட்டுப்பன்றியையும் கொன்று மரத்தில் தொங்கவிட்டுச் சென்றுள்ளது. மீண்டும் வரும் என்பதால் வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளோம் என்றனர். நேற்று காட்டுப்பன்றி குட்டியை காகங்கள் கொத்தி வந்ததையடுத்து, கட்டபெட்டு வனச்சரகர் உத்தரவின் பேரில் வனத்துறையினர் பன்றி உடலை மீட்டு அதே இடத்தில் புதைத்தனர். சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி