நீலகிரியில் தொடரும் புலிகள் மரணம் ஆர்வலர்கள் அதிர்ச்சி

முதுமலைபுலிகள் காப்பகம், மசனகுடி வனக்கோட்டம், சீகூர் வன சரணாலயம் பகுதியில் வன பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்ட போது ஒரு வயது வந்த ஆண் புலி இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது. 

அதன் உடல் பாகங்கள் அப்படியே இருந்தன. இதனைத் தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் மற்றும் பாதுகாவலர் கிருபாசங்கர் அறிவுறுத்தலின் பேரில், மசனகுடி வன கோட்ட துணை இயக்குனர் அருண்குமார் உத்தரவின்படி, NTCA நெறிமுறைப்படி, மருத்துவக் குழு புலியின் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என சீகூர் வனத்துறை ரேஞ்சர் தேவ்ஆனந்த் தெரிவித்தார். 

பைக்காரா பகுதியில் நேற்று முன்தினம் ஒரு புலி இறந்த நிலையில், தற்போது சீகூர் பகுதியில் ஒரு புலி இறந்துள்ளது வன ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி