இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் உதகை ஏடிசி பகுதியில் அதிமுகவின் மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் நகரச் செயலாளர் சண்முகம் ஏற்பாட்டில் தடையை மீறி அக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டும், சட்ட ஒழுங்கை பாதுகாக்க தவறிய திமுக அரசை கண்டித்தும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வேண்டுமென கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 300க்கும் மேற்பட்ட அதிமுகவினரை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபங்களில் அடைத்தனர். அதிமுகவின் போராட்டம் காரணமாக உதகை ஏடிசி பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.