இந்த பாதிப்பைத் தொடர்ந்து, இன்று (ஜூன் 1) காலை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து பேருந்து நிலையம் முன்பு கப்பல் விட்டு வினோத போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்து நிலையத்தின் மையப்பகுதியில் அடிக்கடி மழை நீர் தேங்கி நிற்கும் பிரச்சனை புதியதல்ல ஆனால் புதியதாக திறக்கப்பட்ட பேருந்துநிலையம் இதுசீரமைப்பு மற்றும் வடிகால் அமைப்புகள் சரியாக பராமரிக்கப்படாமை காரணமாக, நிலைமை மிக மோசமாகியிருக்கிறது.
பயணிகள் கால் மூழ்கும் அளவிற்கு தண்ணீரில் நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் மிதக்கும் பேருந்து நிலையம் வேண்டாம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கமிட்டனர். இந்நிலையில் சிலர் சின்னஞ்சிறு கப்பல்களை தண்ணீரில் விட்டுப் பார்வையாளர்களை திருப்பிப் பார்த்தனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.