கடந்த வாரம் தொரப்பள்ளி பகுதியில் உலா வந்த காட்டு யானை ரேஷன் கடையை சூறையாடியது. இந்த நிலையில் இன்று கூடலூரில் இருந்து மைசூர் செல்லக்கூடிய இப்பங்காடு பகுதியில் திடீரென வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை சாலையில் உலா வந்தது. இதனால் மக்கள் அச்சமடைந்தனர். ரோந்து பணியில் இருந்த வனத்துறையினர் காட்டு யானையை அடர்வனப் பகுதிக்குள் விரட்டினர். காட்டு யானை உலா வந்ததால் சிறிது நேரம் வாகனங்கள் நிறுத்தப்பட்டன.
நிலநடுக்கத்தில் காப்பாற்றிய ராணுவ வீரரை மணந்த சிறுமி!