நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக உணவு மற்றும் தண்ணீர் தேடி சிறுத்தை கரடி காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு, தேயிலை தோட்டங்களிலும் உலாவருகின்றன. இந்நிலையில் குன்னூர் பகுதியில் தேயிலை தோட்டத்தில் உள்ள மரத்தின் மீது உணவு தேடி கரடி ஒன்று ஏறி வெகுநேரமாக அமர்ந்திருந்தது. இதனை அவ்வழியாக சென்றவர்கள் தங்களது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அண்ணா பல்கலை.,யில் 22 பணியிடங்கள்