நீலகிரி மாவட்டம் காட்டேரி சேலாஸ் செல்லும் சாலையில் கிளன்டேல் தனியார் எஸ்டேட்டில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சுராஜ் (32) ஊர் திருவிழா என்பதால் செலவுகளை வாங்க இருசக்கர வாகனத்தில் நண்பருடன் சேலாஸ் சென்று கொண்டிருந்த அப்போழுது, கரும்பாலம் டபுள் போஸ்ட் பகுதியில் மேலிருந்து கீழ்நோக்கி வந்த டிப்பர் லாரியும் சுராஜ் சென்ற இருசக்கர வாகனமும் மோதியதில் சுராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடன் சென்ற நண்பர் பலத்த காயங்களுடன் குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சுராஜின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். விபத்து குறித்து கொலக்கம்பை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குன்னூர்
ஊட்டியில் 3 மணி நேரம் மழை- காட்டுத்தீ அபாயம் குறைந்தது