இந்நிலையில் மூன்றாவது நாளாக நேற்று இரவு 3 கரடிகள் ஒரே இடத்தில் உலா வந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டுள்ள ஒருவரின் வீட்டில் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
நாளுக்கு நாள் கரடிகளின் எண்ணிக்கை அப்பகுதியில் அதிகரித்து வருவதால் பொதுமக்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் முன்பே கரடிகளின் நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.