ஊட்டி பகுதியில் இன்று அதிகாலை, சாலையோரம் நெளிந்து கொண்டிருந்த மலைப்பாம்பு வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. தலை உயர்த்தி அச்சுறுத்தும் நிலையில் இருந்த பாம்பைக் கண்டு பயணிகள் வாகனங்களை நிறுத்தினர். வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பாம்பைப் பிடித்து காடுகளுக்குள் விடுவித்தனர். இந்த சம்பவம் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.