நீலகிரியில் தேயிலைத் தோட்டத்தில் 2 குட்டிகளை தோளில் சுமந்தவாறு கரடி உலா வந்ததால் தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். வேலைநேரத்தில் கரடியைக் கண்டவர்கள் உடனே பாதுகாப்பான இடங்களுக்கு ஒதுங்கினர். சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, கரடியை காட்டுப்பகுதிக்குத் திருப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொழிலாளர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.