இதனை கேட்ட வீட்டில் தனியாக இருந்த அவரின் தாயார் ரமாதேவி, அதிர்ச்சி அடைந்து அருகில் இருந்தவர்களுக்கு தகவல் அளித்துள்ளார். தொடர்ந்து, திருடன் என நினைத்து அருகில் உள்ள வீட்டில் இருந்தவர்கள் தடிகளுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
புதர் செடியில் மறைந்திருந்த கரடி குடியிருப்புகள் வழியாக அதிகாலை, 4:20 மணிக்கு நடந்து சென்றது. நாய்கள் குரைத்து, கரடியை விரட்டி சென்ற சப்தம் கேட்டு, அப்பகுதியில் வீடுகளில் உள்ளவர்கள் அனைவரும் எழுந்து வெளியே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.