இந்த நிலையில் இரவு நேரத்தில் கோத்தகிரி கே.எம்.எப் மருத்துவமனை வளாகத்தில் நாயை வேட்டையாட முயன்ற கருஞ்சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த காட்சி அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. எப்போதும் நள்ளிரவில் வரும் சிறுத்தைகள் தற்போது மாலை நேரத்தில் வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அச்சம் அடைந்துள்ளனர். வனத்துறையினர் சிறுத்தையை கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தோடா நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு