ALERT: இரவில் மழை வெளுக்கும்..நீலகிரி மக்களே உஷார்

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (ஜூன் 12) தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் ஜூன் 14, 15 ஆகிய தேதிகளில் கோவை, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், நீலகிரிக்கு ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி